என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Byமாலை மலர்8 Sep 2017 11:43 AM GMT (Updated: 8 Sep 2017 11:43 AM GMT)
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் என மொத்தம் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாம் நிலை 2-வது அலகு ஆண்டு பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் நிலையில் உள்ள 1-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பழுதாகி இருந்த அந்த அலகில் நேற்று தான் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஒரே நாளில் தொழில் நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு காரணமாக 2-வது நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட்டும், தொழில் நுட்ப கோளாறில் 1-வது நிலை முதல் அலகில் 210 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாரை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்டும் என மொத்தம் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாம் நிலை 2-வது அலகு ஆண்டு பராமரிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் நிலையில் உள்ள 1-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பழுதாகி இருந்த அந்த அலகில் நேற்று தான் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஒரே நாளில் தொழில் நுட்ப கோளாறால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு காரணமாக 2-வது நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட்டும், தொழில் நுட்ப கோளாறில் 1-வது நிலை முதல் அலகில் 210 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தொழில்நுட்ப கோளாரை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X