என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலமேடு அருகே குளிர்பான பாட்டில் மூடியை விழுங்கிய குழந்தை பலி
Byமாலை மலர்23 Aug 2017 11:20 AM GMT (Updated: 23 Aug 2017 11:21 AM GMT)
பாலமேடு அருகே 9 மாத குழந்தை வீட்டில் கிடந்த குளிர்பான பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 9 மாத மகள் பத்மஸ்ரீ. சம்பவத்தன்று பத்மஸ்ரீ வீட்டில் கீழே கிடந்த குளிர்பான பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பதறிப்போன பெற்றோர் பதம்ஸ்ரீயை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பதம்ஸ்ரீயின் தொண்டையில் சிக்கியிருந்த மூடியை டாக்டர்கள் அகற்ற முயன்றனர். அதற்குள் குழந்தை பத்மஸ்ரீ பரிதாபமாக இறந்தது.
பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X