search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்சாரம் தாக்கி பெண் பலி
    X

    புதுவை அருகே இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்சாரம் தாக்கி பெண் பலி

    புதுவை அருகே நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அறுந்து விழுந்த மின்கம்பியை பெண் மதித்ததில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

    வானூர்:

    புதுவையை அடுத்த வானூர் அருகே அச்சிரம்பட்டு உள்ளது. இங்குள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பூம் பூம் மாட்டுக்காரர்கள் குடிசை போட்டு வசித்து வருகிறார்கள்.

    அங்கு பொன்னம்மாள் (வயது42) என்பவரும் வசித்து வந்தார். இவரது கணவர் இறந்துவிட்டார். தனிமையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடிசை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 2 மணி அளவில் வானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காற்றும் வீசியது. இதில் அங்குள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பிஅறுந்து கீழே விழுந்தது

    இன்று அதிகாலை பொன்னம்மாள் எழுந்து வெளியே வந்தார்.அப்போது அவர் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் பொன்னம்மாள் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் சேட்டு என்பவர் ஓடி வந்து பொன்னம்மாளை தூக்க முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.

    மின்சாரம் தாக்கியதில் பொன்னம்மாள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதிப் குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் காயம் அடைந்த சேட்டுவை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வானூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×