search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை: 6 பேர் கைது
    X

    ஓசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை: 6 பேர் கைது

    ஓசூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்குமாறு ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

    ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் போலீசார் டவுனில் ஜனபர் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அதே போல சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் மூக்கண்டப்பள்ளி, ஜூஜூவாடி, ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கடையின் உரிமையாளரான பிரகாஷ்பிரபு (வயது 43), ஷியாம் (26), கோபால் (29), சேகர் (45), ரவிச்சந்திரன் (21), சபியுல்லா (29) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 150 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×