என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
Byமாலை மலர்27 July 2017 4:08 PM GMT (Updated: 27 July 2017 4:08 PM GMT)
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன.
கரூர்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 190 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 590 மாணவர்களும், 6 ஆயிரத்து 417 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 7 பேர் எழுதியிருந்தனர். இதில் 6 ஆயிரத்து 204 மாணவர்களும், 6 ஆயிரத்து 179 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றிருந் தனர்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மதிப்பெண் சான் றிதழ் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகிக்கப்பட்டன.
மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். அதனை மாணவ- மாணவிகள் வாங்கி ஆர்வமுடன் பார்வையிட்டனர். கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியை சண்முகவடிவு வழங்கினார். மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதி யை வேலை வாய்ப்பு அலு வலக பதிவு மேற்கொள்ள பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டன. பள்ளிகளில் வருகிற 9-ந்தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்பவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளுக்கு பின் மாணவ- மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 190 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 590 மாணவர்களும், 6 ஆயிரத்து 417 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 7 பேர் எழுதியிருந்தனர். இதில் 6 ஆயிரத்து 204 மாணவர்களும், 6 ஆயிரத்து 179 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றிருந் தனர்.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மதிப்பெண் சான் றிதழ் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகிக்கப்பட்டன.
மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். அதனை மாணவ- மாணவிகள் வாங்கி ஆர்வமுடன் பார்வையிட்டனர். கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியை சண்முகவடிவு வழங்கினார். மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதி யை வேலை வாய்ப்பு அலு வலக பதிவு மேற்கொள்ள பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பள்ளிகளில் இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டன. பள்ளிகளில் வருகிற 9-ந்தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்பவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X