என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம்-புதுச்சேரியில் வருமான வரி சோதனையில் ரூ.1429 கோடி கருப்பு பணம் சிக்கியது
Byமாலை மலர்25 July 2017 6:27 AM GMT (Updated: 25 July 2017 6:27 AM GMT)
தமிழகம் - புதுவையில் வருமான வரி சோதனையில் ரூ.1,429 கோடி கருப்பு பணம் சிக்கியதாக வருமான வரி புலனாய்வு இயக்குனர் ஜெனரல் முரளிகுமார் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை வருமான வரி அலுவலகத்தில் 157-வது வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. இதில் வருமான வரி புலனாய்வு இயக்குனர் ஜெனரல் முரளிகுமார் பேசுகையில் கூறியதாவது:-
2016-17-ம் ஆண்டில் வருமான வரி தொடர்பாக 100 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.3,210 கோடி பணத்தை கண்டுபிடித்து மீட்டோம். தற்போது கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டும் ரூ.1,429 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் சிக்கியதில் 50 சதவீதத்தை 3 மாதத்தில் நெருங்கி விட்டது.
2016 மே மாதத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது 42 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 2015-16-ல் மொத்தம் 18 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.428 கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டது.
தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளது. இதனால் நல்ல தகவல்கள் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருகிறோம்.
இதில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருமான வரித்துறை கமிஷனர் பழனிவேல்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு ரூ.60 ஆயிரத்து 606 கோடி வரி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.71 ஆயிரத்து 409 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வருமான வரி அலுவலகத்தில் 157-வது வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. இதில் வருமான வரி புலனாய்வு இயக்குனர் ஜெனரல் முரளிகுமார் பேசுகையில் கூறியதாவது:-
2016-17-ம் ஆண்டில் வருமான வரி தொடர்பாக 100 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.3,210 கோடி பணத்தை கண்டுபிடித்து மீட்டோம். தற்போது கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டும் ரூ.1,429 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் சிக்கியதில் 50 சதவீதத்தை 3 மாதத்தில் நெருங்கி விட்டது.
2016 மே மாதத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது 42 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 2015-16-ல் மொத்தம் 18 சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.428 கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டது.
தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் மேம்பட்டு உள்ளது. இதனால் நல்ல தகவல்கள் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெற்றிகரமாக மீட்டு வருகிறோம்.
இதில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வருமான வரித்துறை கமிஷனர் பழனிவேல்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.9 லட்சத்து 87 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு ரூ.60 ஆயிரத்து 606 கோடி வரி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.71 ஆயிரத்து 409 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களுக்கும், வணிகர்களுக்கும் முழுமையான பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X