என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்செங்கோடு அருகே நூற்பாலை பெண் தொழிலாளி கற்பழித்து கொலை?
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சிந்தம்பாளையம் அருகே அப்பியாகாடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது ஆடை அலங்கோலமான நிலையில் கிடந்தது.
இதுகுறித்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருச்செங்கோடு டி.எஸ்.பி. ராஜு, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஆராக்கியராஜ் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்பநாய் பொதிகை வரவழைக்கப்பட்டது.
அந்த நாய் பெண்ணின் பிணத்தை மோப்பம் பிடித்து அருகே உள்ள ஒரு நூற்பாலை வாசலில் போய் நின்றது.
இதனால் போலீசார் பிணமாக கிடந்த பெண்ணின் புகைப்படத்தை கொண்டு போய் நூற்பாலை ஊழியர்களிடம் காட்டி விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று அடையாளம் தெரிந்தது.
அந்த பெண்ணின் பெயர் ஆதிலட்சுமி (வயது 35). திருச்செங்கோட்டை அடுத்த கொல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் குடும்பத்தை சுமக்க வேண்டிய கடமை இவருக்கு ஏற்பட்டது. இதற்காக தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு சென்றுவந்தார். நேற்று இரவு வேலைக்கு சென்ற இவர் வேலைக்கும் செல்லவில்லை. இந்த நிலையில் தான் அவர் இன்று காலை பிணமாக கிடந்துள்ளார். அவரது பிணம் கிடந்த இடத்தின் அருகே மதுபாட்டில்கள், டம்ளர், புரோட்டா பார்சல் ஆகியவை கிடந்தது.
இதனால் ஆதிலட்சுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து கொன்றிருக்கலாம் அல்லது ஆதிலட்சுமிக்கு தெரிந்த நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று கற்பழிக்க முயற்சி செய்து அவர் போராடியதால் அவரை அந்த கும்பல் அடித்துக் கொன்றிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
ஆதிலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக அழைத்தவர்கள் யார் என்பது குறித்தும், அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்களை வைத்தும் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்