search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளை
    X

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளை

    தண்டையார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை நேதாஜிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. திருச்சியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது 3 மர்ம நபர்கள் வீடடிற்குள் புகுந்தனர். அவர்கள் பாத்திமா வாயை துணியால் பொத்தி சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    அவர் அணிந்திருந்த 2 மோதிரத்தை கத்தியால் வெட்டி எடுத்த அக்கும்பல் தங்க கம்மலையும் பறித்து சென்று தப்பியது. இரவு பாத்திமாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×