search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ சுரங்க ரெயிலில் ஒரு மாதத்தில் 2 லட்சம் பேர் பயணம்
    X

    மெட்ரோ சுரங்க ரெயிலில் ஒரு மாதத்தில் 2 லட்சம் பேர் பயணம்

    கடந்த 1 மாதத்தில் மட்டும் நேரு பார்க் - திருமங்கலம் இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.
    சென்னை:

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. சுரங்கப்பாதை பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருமங்கலம்- நேரு பார்க் இடையே கடந்த மாதம் 14-ந்தேதி மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.

    8 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த சுரங்கப் பாதையில் 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. சுரங்க பாதை ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதில் ஒரு முறையாவது சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.

    கடந்த 1 மாதத்தில் மட்டும் நேரு பார்க் - திருமங்கலம் இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயிலில் 2 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர். சராசரியாக 1,000 பேர் பயணம் செய்துள்ளனர்.

    இதில் திருமங்கலம்- நேரு பார்க் ரெயில் நிலையங்களில் தான் அதிகமான பேர் ஏறுகிறார்கள். இதேபோல விமான நிலையம் வரை செல்வதிலும் பயணிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.
    Next Story
    ×