என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிப்மர் எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு 339 மையங்களில் நாளை நடக்கிறது
Byமாலை மலர்3 Jun 2017 3:52 AM GMT (Updated: 3 Jun 2017 3:52 AM GMT)
ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் 2017-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வு 75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் 2017-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
நுழைவு தேர்வில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். தேர்வு 75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நடைபெற உள்ளது.
நுழைவு தேர்வு காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் காலையில் 83 ஆயிரத்து 720 மாணவர்களும், பிற்பகல் 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
புதுவையில் உள்ள 6 மையங்களில் ஆயிரத்து 861 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்க உள்ளது.
மாணவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மாணவர்கள் ஆதார் கார்டு, இ.ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜாமர்கள் தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெற்றோர்கள் தேர்வு மையங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30-க்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.
ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு பயோமெட்ரிக் வருகை பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊனமுற்றோருக்காக தரை தளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் 2017-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். நுழைவு தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
நுழைவு தேர்வில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். தேர்வு 75 நகரங்களில் உள்ள 339 மையங்களில் நடைபெற உள்ளது.
நுழைவு தேர்வு காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் காலையில் 83 ஆயிரத்து 720 மாணவர்களும், பிற்பகல் 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.
புதுவையில் உள்ள 6 மையங்களில் ஆயிரத்து 861 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரையும் நடக்க உள்ளது.
மாணவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மாணவர்கள் ஆதார் கார்டு, இ.ஆதார் கார்டு, பாஸ்போர்ட் ஆகிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜாமர்கள் தேர்வு மையங்களில் பொருத்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெற்றோர்கள் தேர்வு மையங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
காலை 9.30 மணிக்கு மேல் மற்றும் பிற்பகல் 2.30-க்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.
ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு பயோமெட்ரிக் வருகை பதிவு மற்றும் புகைப்படம் எடுக்கும் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊனமுற்றோருக்காக தரை தளத்தில் தேர்வு எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X