search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி தடையை கண்டித்து திராவிடர் கழகம் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
    X

    மாட்டு இறைச்சி தடையை கண்டித்து திராவிடர் கழகம் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

    மாட்டு இறைச்சி தடையை கண்டித்து திராவிடர் கழகம் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஒத்த கருத்துள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
    திருச்சி:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் அனைவருக்கும் உள்ளது. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் இந்துத்துவா கொள்கையை மத்திய அரசு புகுத்தி இந்துத்துவா ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறது.

    மாட்டிறைச்சி தடையை கண்டித்து வருகிற 1-ந்தேதி சென்னையில் ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஒத்த கருத்துள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×