என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவ மழைக்கு வாய்ப்பு
Byமாலை மலர்27 May 2017 9:05 AM GMT (Updated: 27 May 2017 9:05 AM GMT)
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் பருவ மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவ மழை அந்தமான் கடல் பகுதியில் கடந்த வாரம் தொடங்கி இலங்கைக்கு பரவியது.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது.
இதன் காரணமாக குமரி கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது மேலும் பரவி கேரளாவில் தென் மேற்கு பருவ மழை ஓரிரு நாளில் தொடங்குகிறது.
நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் லட்சத்தீவு மற்றும் வடக்கு, தெற்கு கர்நாடகம் கர்நாடக கடற்கரை பகுதியில் 30-ந்தேதி முதல் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் புதுவையில் மேல் அடுக்கு சுழற்சியால் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X