search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான பிரெட் புலாவ் செய்வது எப்படி
    X

    அருமையான பிரெட் புலாவ் செய்வது எப்படி

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் புலாவ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரக சம்பா அரிசி - 1 கப்
    தேங்காய்ப் பால் - ஒரு கப்,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 5,
    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,
    தயிர் - 2 டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா ஒன்று,
    பிரெட் துண்டுகள் - அரை கப்,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பிரெட் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.

    வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×