என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் தயிர் வடை
Byமாலை மலர்12 Oct 2017 9:50 AM GMT (Updated: 12 Oct 2017 9:50 AM GMT)
வடையை சட்னி வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதில் தயிர், மசாலா தூள், காரா பூந்தி சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்,
கெட்டித் தயிர் - 2 கப்,
பால் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பாதாம், முந்திரி - தலா 8,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
காரா பூந்தி - தேவைக்கு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
உளுந்தை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும்.
தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து… பால், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்த வடைகளை பால் - தயிர் கலவையில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் காரா பூந்தி தூவி பரிமாறவும்.
சூப்பரான ஸ்பெஷல் தயிர் வடை ரெடி.
முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்,
கெட்டித் தயிர் - 2 கப்,
பால் - அரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பாதாம், முந்திரி - தலா 8,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
காரா பூந்தி - தேவைக்கு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
உளுந்தை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும்.
தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து… பால், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்த வடைகளை பால் - தயிர் கலவையில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் காரா பூந்தி தூவி பரிமாறவும்.
சூப்பரான ஸ்பெஷல் தயிர் வடை ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X