என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி - வேர்க்கடலை வடை
Byமாலை மலர்28 July 2017 9:59 AM GMT (Updated: 28 July 2017 9:59 AM GMT)
ஜவ்வரிசி - வேர்க்கடலை வடையானது மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்க மசித்து கொள்ளவும்.
வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைத்த மாவை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி - வேர்க்கடலை வடை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 2
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்க மசித்து கொள்ளவும்.
வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைத்த மாவை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி - வேர்க்கடலை வடை ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X