என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான சைடிஷ் பன்னீர் பட்டாணி குருமா
Byமாலை மலர்13 July 2017 7:33 AM GMT (Updated: 13 July 2017 7:33 AM GMT)
சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பன்னீர் பட்டாணி குருமா. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பட்டாணி - அரை கப்
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு.
தாளிக்க :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க :
தேங்காய்த்துருவல் - அரை கப்
முந்திரி - 8.
செய்முறை :
* பன்னீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* நறுக்கிய பன்னீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
* விசில் போனவுடன் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான பன்னீர் பட்டாணி குருமா ரெடி.
கவனிக்க வேண்டியவை:
தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சைப் பட்டாணி - அரை கப்
பன்னீர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு.
தாளிக்க :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க :
தேங்காய்த்துருவல் - அரை கப்
முந்திரி - 8.
செய்முறை :
* பன்னீரை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* நறுக்கிய பன்னீர், பச்சைப் பட்டாணி, வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு ஆகியவற்றை குக்கரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.
* விசில் போனவுடன் மூடியைத் திறந்து அரைத்த தேங்காய் முந்திரி விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் குருமாவில் சேர்த்துக் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான பன்னீர் பட்டாணி குருமா ரெடி.
கவனிக்க வேண்டியவை:
தண்ணீர் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. பட்டாணி அதிகம் வெந்துவிடக்கூடாது. அதிக நேரம் கொதிக்கக் கூடாது. இதில் தண்ணீர் அளவு அதிகமானால், மட்டும் பொட்டுக்கடலையை அரைத்துச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X