search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபி
    X

    சளி, இருமலுக்கு இதமான சுக்கு, மல்லி காபி

    சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும்.
    தேவையான பொருட்கள் :

    சுக்கு காபி பொடி அரைக்க :

    சுக்கு - 1/2 கப்
    மல்லி - 1/4 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    சுக்கு காபி செய்ய :

    தண்ணீர் - 2 கப்
    சுக்கு காபி பொடி - 2 டீஸ்பூன்
    பனங்கற்கண்டு - தேவையான அளவு.



    செய்முறை :

    முதலில் சுக்கு மல்லி பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 டீஸ்பூன் சுக்கு பொடியை சேர்த்து, பின் அதில் பனங்கற்கண்டு சேர்த்து 8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

    அதில் உள்ள கற்கண்டு கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×