என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான பாசிப்பருப்பு - பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி
Byமாலை மலர்22 Sep 2017 4:22 AM GMT (Updated: 22 Sep 2017 4:23 AM GMT)
குழந்தைகளுக்கு அடிக்கடி பன்னீர் செய்து கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பாசிப்பருப்பு பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - முக்கால் கப்,
பன்னீர் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்),
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, அதில் அரைத்த பாசிப்பருப்பு விழுது, பன்னீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பன்னீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான பாசிப்பருப்பு - பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - முக்கால் கப்,
பன்னீர் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய், பூண்டு - தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்),
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு - பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு, அதில் அரைத்த பாசிப்பருப்பு விழுது, பன்னீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு - பன்னீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சத்தான பாசிப்பருப்பு - பன்னீர் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X