என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான டிபன் கேழ்வரகு ஊத்தாப்பம்
Byமாலை மலர்18 Aug 2017 3:31 AM GMT (Updated: 18 Aug 2017 3:31 AM GMT)
கேழ்வரகு மாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை அல்லது மாலை நேரத்தில் ராகி ஊத்தாப்பம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பச்சை மிளகாய், சீரகம், துருவிய இஞ்சி, உப்பு, சிறிதளவு தண்ணீர், தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேலாக கரைத்து வைத்துள்ள ராகி மாவை கெட்டியாக ஊத்தாப்பம் போல் ஊற்றி அதன் மேலாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி தழை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான கேழ்வரகு ஊத்தாப்பம் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகு மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பச்சை மிளகாய், சீரகம், துருவிய இஞ்சி, உப்பு, சிறிதளவு தண்ணீர், தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேலாக கரைத்து வைத்துள்ள ராகி மாவை கெட்டியாக ஊத்தாப்பம் போல் ஊற்றி அதன் மேலாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி தழை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சத்தான கேழ்வரகு ஊத்தாப்பம் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X