என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஆரோக்கிய சமையல்: தூதுவளை பருப்பு ரசம்
Byமாலை மலர்10 Aug 2017 3:30 AM GMT (Updated: 10 Aug 2017 3:30 AM GMT)
தூதுவளையில் சட்னி, தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தூதுவளையை வைத்து சூப்பரான சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தூதுவளை இலை - 10
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
ரசப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
தொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.
தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தூதுவளை இலை - 10
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
ரசப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
தொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.
தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X