என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி
Byமாலை மலர்5 Aug 2017 5:28 AM GMT (Updated: 5 Aug 2017 5:28 AM GMT)
சோள ரவை பிடியில் செய்யும் கொழுக்கட்டை மிகவும் சத்தானது.... செய்வதும் சுலபம்...டேஸ்டும் சூப்பராக இருக்கும். இன்று இந்த கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மக்காசோள ரவை - ஒரு கப்,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு,
தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை :
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
அடுப்பை 'சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து இட்லி சட்டியில் வைத்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சோள ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மக்காசோள ரவை - ஒரு கப்,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு,
தேங்காய் துருவல் - அரை கப்.
செய்முறை :
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
அடுப்பை 'சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து இட்லி சட்டியில் வைத்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான சோள ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X