என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்
Byமாலை மலர்30 Jun 2017 5:17 AM GMT (Updated: 30 Jun 2017 5:17 AM GMT)
காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.
* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை :
* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.
* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X