search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்
    X

    சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்

    காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - 1 கப்
    முழு கேழ்வரகு - 1 கப்
    கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    * வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

    * கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

    * அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    * தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

    * சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×