search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்
    X

    நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த பக்தர்கள்

    நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவு தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் அம்பாளுக்கு தங்கத்தேர் கடந்த 2009-ம் ஆண்டு உபயதாரர்கள் உதவியுடன் செய்யப்பட்டது. 10 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியுடன் 6 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டது.

    இந்த தேர் நெல்லையப்பர் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்று, 9-ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவு தங்க தேர் இழுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தங்கத்தேர் குழுவின் முன்னாள் நிர்வாகிகள் சோனா வெங்கடாசலம், காசிவிசுவநாதன், எம்.ஆர்.சுப்பிரமணியம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×