search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழாவில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததை படத்தில் காணலாம்.
    X
    நெல்லையப்பர் கோவில் திருக்கல்யாண விழாவில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு காட்சி கொடுத்ததை படத்தில் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி - அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.
    நெல்லையில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதி உலா சென்று வந்தனர். மேலும் கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் பக்திஇசை, சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 14-ந் தேதி அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா தொடங்கி நடந்து வந்தது. இந்த விழா நேற்று முன்தினம் இரவு வரை நடந்தது. தினமும் மாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சுவாமி-அம்பாள் பூப்பந்து உருட்டி விளையாடும் வைபவம் நடந்தது.

    நேற்று மறுவீடு பட்டணப்பிரவேச விழா நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, ஹோம பூஜை நடந்தது.

    இரவு 7-30 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப்பிரவேசம், வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×