search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது
    X

    நாகராஜா கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது

    நாகர்கோவில் நாகராஜாகோவிலில் வருகிற 27-ந் தேதி ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நாகர்கோவில் நாகராஜாகோவிலில் வருகிற 27-ந் தேதி ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. அன்று மதியம் 12.48 மணிக்கு சிம்மராசியிலிருந்து ராகு பகவான் கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயருகின்றனர்.

    இதையொட்டி நாகராஜாகோவிலில் அதிகாலை மகாகணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து ராகு- கேது ஹோமமும், மதியம் 12 மணிக்கு அஷ்டாபிஷேகமும், 12.40 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    ராகு- கேது பெயர்ச்சியையொட்டி நாகராஜா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பரிகாரம் மற்றும் அர்ச்சனை செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இணை ஆணையர் பாரதி தலைமையில், கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×