என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்23 July 2017 3:34 AM GMT (Updated: 23 July 2017 3:34 AM GMT)
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதன் மூலம் தமிழகத்திலேயே சுயம்பு வடிவில் சனீஸ்வரர் உள்ள ஒரே கோவில் என்ற பெருமையை குச்சனூர் சனீஸ்வரர் கோவில் பெற்றுள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சனீஸ்வரரின் வாகனமான காக்கை சகுனம் பார்க்கப்பட்டது.
சகுனம் கிடைத்ததும், காக்கை உருவம் வரையப்பட்ட கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.
திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் கோவில் வளாகத்தில் உப்பு, எள் தீபம் ஏற்றியும், காக்கை பொம்மையை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் வளாகம் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சனீஸ்வரரின் வாகனமான காக்கை சகுனம் பார்க்கப்பட்டது.
சகுனம் கிடைத்ததும், காக்கை உருவம் வரையப்பட்ட கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.
திருவிழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் கோவில் வளாகத்தில் உப்பு, எள் தீபம் ஏற்றியும், காக்கை பொம்மையை வைத்தும் வழிபாடு நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X