என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 27-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்22 July 2017 3:26 AM GMT (Updated: 22 July 2017 3:26 AM GMT)
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந்தேதி ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இது ராகு-கேது தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவிலில் ராகு-கேது ஏக சரீரமாகி இறைவனை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு அருள்பெற்றனர் என்பது புராணவரலாறு.
கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழிகள் உள்ளது. ராகுவும்-கேதுவும் கோவில் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி வருகிற 27-ந்தேதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
26-ந்தேதி காலை முதற்காலம், விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 27-ந்தேதி மதியம் 12:48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி ஏகதின லட்ச்சார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.
கருவறையில் பாம்புடன் கூடிய லிங்க வடிவாய் இறைவன் எழுந்தருளியுள்ளார். கருவறையை சுற்றிலும் அகழிகள் உள்ளது. ராகுவும்-கேதுவும் கோவில் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி வருகிற 27-ந்தேதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
26-ந்தேதி காலை முதற்காலம், விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. 27-ந்தேதி மதியம் 12:48 மணிக்கு ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடகராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம்பெயரும் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி ஏகதின லட்ச்சார்ச்சனையுடன் விழா நிறைவடைகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X