என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சங்கரன்கோவிலில் கொடியேற்றம்: சித்திரை திருவிழாவுக்கு கோமதி யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்29 April 2017 3:42 AM GMT (Updated: 29 April 2017 3:42 AM GMT)
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று(சனிக்கிழமை) சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் காலை, மாலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக நேற்று காலை சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார், கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் தனித்தனியாக நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக நேற்று காலை சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார், கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரோட்டம் தனித்தனியாக நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X