search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் பத்திரகாளியம்மன்
    X

    அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும் பத்திரகாளியம்மன்

    திருவாரூர் மாவட்டம் திருமாகாளம் என்ற ஊரில் உள்ள மகாகாளநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பத்திரகாளி அம்மன் சகல தோ‌ஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது.
    திருவாரூர் மாவட்டம் திருமாகாளம் என்ற ஊரில் உள்ளது மகாகாளநாதர் கோவில். இந்த ஆலயம் நாகதோ‌ஷம், ராகு தோ‌ஷம், பிரம்மஹத்தி தோ‌ஷம் உள்ளிட்ட சகல தோ‌ஷங்களையும் போக்கும் தலமாக திகழ்கிறது. அஷ்ட நாகங்களில் ஒன்றான வாசுகி என்ற நாகத்தின் பிரம்மஹத்தி தோ‌ஷம் நீங்கிய தலம் இதுவாகும்.

    இந்த ஆலயத்தில் பத்திரகாளி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இவர் தொழில் அபிவிருத்தி, திருமண வரம், கல்விச் செல்வம் உள்ளிட்ட பல்வேறு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை, பவுர்ணமி, அமாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் எலுமிச்சைப் பழ மாலை மற்றும் சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    திருவாரூரில் இருந்து 22 கிலோமீட்டரில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருமாகாளம் திருத்தலத்தை அடையலாம்.
    Next Story
    ×