search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ugadi"

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உகாதி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகெங்குமுள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு பா.ஜனதா சார்பாக, இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த இனிய உகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
    • தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.
    • உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

    வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம்.

    புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் உகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும்!

    இந்தப் புத்தாண்டு, தென்னிந்திய மக்களின் உரிமைகள் மீட்கப்படும் ஆண்டாகவும், நமக்குரிய முறையில் வரிப்பகிர்வைப் பெறும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாகவும் அமையட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது.
    • மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் தெலுங்கு வருட பிறப்பை ஒட்டி யுகாதி ஆஸ்தானம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தெலுங்கு வருட பிறப்பு வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பதி கோவிலில் யுகாதி ஆஸ்தானம் வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது.

    யுகாதி ஆஸ்தானத்தையொட்டி வரும் 21-ந் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் மற்றும் யுகாதி பண்டிகையொட்டி 21 மற்றும் 22-ந் தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் 22-ந் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவ சேவை, ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. யுகாதி ஆஸ்தானம் நடைபெறும் அன்று கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் வண்ண வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    யுகாதி ஆஸ்தானம் அன்று அதிகாலை 3 மணிக்கு ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் சேவை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மற்றும் விஷ்வகேஸ்வரருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்படும். காலை 7 மணி முதல் 9 மணிக்குள் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி சாமி வீதி உலா நடைபெறுகிறது. மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு ஏழுமலையானிடம் ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, புது பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 79,561 பேர் தரிசனம் செய்தனர். 36,784 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #Ugadi
    சென்னை:

    தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டான யுகாதி திருநாள் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘யுகாதி’ புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.

    பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பேசும் மொழி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

    மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-



    தி.மு.க. ஆட்சியில் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசு அதை ரத்து செய்தது. 2006-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கருணாநிதி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் யுகாதி புத்தாண்டுக்கு மீண்டும் விடுமுறை அளித்தார். அவர் ஆட்சியில் இருந்த போதெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான உறவில் எந்த ஒரு உராய்வும் ஏற்பட்டு விடாதவாறு போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறார் என்பதை மக்கள் அறிவார்கள்.

    அண்டை மாநிலங்களில் உள்ள நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, உற்ற நண்பர்களாக, ஒருவருக்கொருவர் இணைபிரியாத பாசத்துக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறோம். அனைவரும் முன்னேற வேண்டும் என்பதே நம் சீரிய நோக்கம். அந்த விசால மனப்பான்மையுடன் பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தின் இனிய உறவை எவ்வித தொய்வும் இன்றி நாம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று கூறி தெலுங்கு, கன்னட மக்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது அன்பான யுகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:-

    தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. இதை உணர்ந்து அவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், அதேபோல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து இங்கே குடியேறி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களால் யுகாதி என்கிற புத்தாண்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

    இந்த யுகாதி புத்தாண்டில் மத, சாதி துவேஷம் நீங்கி மத்தியில் நல்லாட்சி அமைந்திட உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    வசந்த காலத்தின் தொடக்கமான யுகாதி புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்களைப் போல இனி யாரும் மொழி, மதம், இனம், சாதி ஆகியவற்றின் பெயரால் நம்மைப் பிரித்தாள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று யுகாதி திருநாளில் சபதமேற்போம். புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியட்டும், ஆரோக்கியமும் அன்பும் நிறையட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இதேபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் ஆகியோரும் யுகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். #Ugadi
    ×