நாளை பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

காலை 6.07 மணி முதல் புதன்கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது.கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
நாளை பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.07 மணிக்கு தொடங்கி புதன் கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com