

சென்னை:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பைப் பகிர்வோம்!
சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போற்றும் நன்னாளாம் இந்த ஈகைப் பெருநாள் புனித ரமலான் திருநாள்.
அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியையும், அமைதியையும் வளத்தையும் கொண்டு வரட்டும்!
என் அன்பு இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.