

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
பிரச்சார பயணத்தின்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இணைந்தார்.
இந்நிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.
அப்போது அவர்," நாளைய தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.