தென் மாவட்ட மக்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி

சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி
Published on

கோவை:

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

* மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென் மாவட்ட மக்களை காப்போம்.

* மீட்பு பணி தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன்.

* தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாக குவிக்கப்பட்டுள்ளது.

* தற்போது தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

* சென்னை அனுபவத்தை வைத்து தென் மாவட்டங்களில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* அரசின் சேவைகளை எளிதில் மக்களிடம் கொண்டு செல்வதற்கு மக்களுடன் முதல்வர் திட்டம் உதவியாக இருக்கும்.

* முகாம் அமைத்து மனுக்கள் பெறப்பட்டு 30 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

* மக்களுடன் முதல்வர் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

* மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளாக 13 துறைகள் கண்டறியப்பட்டு அதன் வாயிலாக தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com