நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? - முதலமைச்சர் விஜய்

எனக்கு காயம், வலியை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுத்தனர். காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய்
Published on

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

* ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம்?

* நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்.

* யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என கூறுங்கள், நான் உங்களுடன் உள்ளேன். லஞ்சம் கொடுக்காதீர்கள்.

* எனக்கு காயம், வலியை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் சரியான பதிலடி மக்கள் கொடுத்தனர். காலத்திற்கும் திமுக எழ முடியாத அளவிற்கு மக்கள் நிரந்தரமாக பதிலடி கொடுக்க வேண்டும்.

* மக்கள் நம் பக்கம் இருக்கும் போது நமக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? நாங்கள் வாஷிங் மெஷினா? தி.மு.க. தான் வெண்டிங் மெஷின்.

* அரசியல் வியாபாரத்துக்கான வெண்டிங் மிஷன் திமுக, ஓட்டுக்கு காசு கொடுக்கம் கலாச்சாரத்தை த.வெ.க. உடைத்தது.

* வென்று முதலமைச்சர் ஆன பிறகும், நான் கரூர் செல்லக்கூடாது எனச்சொல்வதில் என்ன நியாயம்?

* தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும்.

* மக்களே, வரும் இடைத்தேர்தலில் தீயசக்தி திமுகவை வைத்து வெளுத்து விடுங்கள்.

* மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை தமிழகம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com