திருப்புவனம் அருகே கள் பறிமுதல்: பெண் கைது

திருப்புவனம் அருகே கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருப்புவனம்:

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது முக்குடி கிராமம். இந்தப் பகுதியில் கள் விற்பதாக தனிப்பிரிவு போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் முக்குடி பகுதிக்கு சென்று கள் விற்பனை செய்த மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள்(வயது 65) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் இவர் பதுக்கி வைத்திருநத் 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com