

சென்னை:
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வருமாறு:-
மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்த மாவீரன் ஒண்டிவீரனின் 250-வது நினைவுநாள்.
வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரனின் பெயர் என்றும் நினைவுக்கூரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.