

புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் சோனியா காந்தி. உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்ச்சிப்பிரச்சார கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்தார். கடைசியாக சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் திடீரென டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.