

புதுடெல்லி:
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசனை நடத்திச் சென்றார்.
இந்நிலையில், நான்குநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து அரசி மேக்ஸிமா இன்று மாலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தவும் அரசி மேக்ஸிமா திட்டமிட்டுள்ளார். #QueenMaxima