மோசமாகும் வாங்சுக் உடல்நிலை: பிரதமர் மோடிக்கு சர்வதேச அமைப்பு கடிதம்

மாணவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து போராட்டக்காரர்கள் தீவிர கவலைகளை எழுப்பியிருப்பதாக கூறியது.
மோசமாகும் வாங்சுக் உடல்நிலை: பிரதமர் மோடிக்கு சர்வதேச அமைப்பு கடிதம்
Published on

நீட் (NEET) தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் எனக் கூறப்படுபவை தொடர்பாக கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்று, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' (Hindus for Human Rights) என்ற அமைப்பு, தேர்வு முறைகேடுகள், கல்வி நிர்வாகம், நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் பொது அமைப்புகள் தோல்வியடையும்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் குறித்து போராட்டக்காரர்கள் தீவிர கவலைகளை எழுப்பியிருப்பதாக கூறியது.

பிரதமருக்கு கடிதம்:

"அரசு போராட்டக்காரர்களை சந்திக்க வேண்டும்; அவர்கள் சுட்டிக்காட்டிய தேர்வு மற்றும் நிர்வாக தோல்விகளுக்கு ஆக்கபூர்வமான பதிலை அளிக்க வேண்டும்; அத்துடன் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான, காலக்கெடுவுடன் கூடிய செயல்முறையை உருவாக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

"அரசு உடனடியாகப் போராட்டக்காரர்களைச் சந்திக்க வேண்டும்; அவர்களை இத்தகைய போராட்டத்திற்குத் தள்ளிய தோல்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்; மேலும் அலட்சியப்போக்கு ஒரு உயிரைப் பறிக்கும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' அமைப்பின் நிர்வாக இயக்குனர் சுனிதா விஸ்வநாத் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாங்சுக் மற்றும் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் தங்கள் உடல்நலத்திற்கும் உயிருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com