இந்திய ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு காசி தமிழ் சங்கமம்- ஜி.கே.வாசன்

கலாச்சாரத்தை பேணிக்காப்பது நமது கடமை.நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் உறவை பிரதமர் மெருகேற்றி உள்ளார்.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது. இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com