ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா

அமித் ஷா உடன் உமர் அப்துல்லா சந்திப்புபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு ஆதரவு என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அத்துடன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீரையும், லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேற்று மாலை டெல்லியில் உள்துறை மந்திரியாக அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமார் அரைமணி நேரம் நடைபெற்றுள்ளது. இருவருடைய சந்திப்பு மிகவும் சுமுகமாக சென்றுள்ளது.

அப்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படும் என அமித் ஷா உமர் அப்துல்லாவுக்கு உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com