வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி

தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். எனவே வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp
வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில் தவறில்லை - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி
Published on

புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகளுக்கு வாட்ஸ்-அப், டுவிட்டர் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து வருகிறார்.

வாட்ஸ்-அப், டுவிட்டர் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்டதல்ல. இதனால் வாட்ஸ்-அப், டுவிட்டரை பயன்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

வாட்ஸ்-அப் உத்தரவுக்கு பணிந்து செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கம்தான் சமூக வலைதளங்கள். இதனை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. மேலும், அவசரமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சமூக வலை தளங்கள் வசதியாக உள்ளது. எனவே, வாட்ஸ்-அப்பை பயன்படுத்துவதில் தவறில்லை.

இவ்வாறு கிரண்பேடி கூறினார். #Governorkiranbedi #cmnarayanasamy #whatsapp

X

Maalai Malar
www.maalaimalar.com