ஊழல் வழக்கில் சிக்கிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்- முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

ஊழல் வழக்கில் சிக்கிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டினார். உலகம் முழுவதும் காவல்துறை என்பது ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்துவார்கள்.
ஊழல் வழக்கில் சிக்கிய அ.தி.மு.க. முன்னாள்  அமைச்சர்கள் சுதந்திரமாக திரிகிறார்கள்- முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மாரி யப்பன் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் மேரி, பாலமஸ்தான் முன்னிலை வகித்தனர். முருகானந்தம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட செயலா ளர் அர்ஜுனன், ஜோதி லட்சுமி, கட்சியின் மூத்த உறுப்பினர் கணேசன் ஆகி யோர் பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எம்.ஏ.வு மான பாலபாரதி சிறப்புரை யாற்றினார். அவர் பேசிய தாவது:-

உலகம் முழுவதும் காவல்துறை என்பது ஆளும் கட்சி என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்து வார்கள். அவர்களுக்கு எதி ராக போராட்டம் நடத்துவது தான் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இருக்கும். ஆனால் இங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு அனுமதி மறுத்து பின்னர் அனுமதி கொடுத்து உள்ளனர். காரணம் என்ன என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

மகளிருக்கான மசோதா 1966-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 27 ஆண்டு களுக்கு பின்னால் இப்போது தூசி தட்டி எடுத்து பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் பெரும் பரபரப்பு டன் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா 2024 தேர்தலில் செயல்படுத்தப்ப டாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி வரையறை செய்து, ஓபிசி, பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் வரை யறை முடிந்து 2029-ல் மசோதா சட்டமாக்கி வரும்.

தென்னிந்தியாவில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் அரசியல் நடை பெற்று வருகிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நடை பயணத்தின் போதும் பணம் கொடுத்து தொண்டர் களை விலைக்கு வாங்கி கூட்டம் சேர்த்து வருகிறார்.

தற்போது அதிமுக- பா.ஜனதா இடையே குழா யடி சண்டை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கைகட்டி பா.ஜனதா தொகுதி பங்கீடு குறித்து கேட்டு வந்தது. இப்போது நிலை என்ன? அவர்கள் சொல்வதை இவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது.

தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஆனால் குட்கா, புகையிலை போன்ற ஊழல் வழக்கில் தொடர்புடைய 5 அ.தி.மு.க. அமைச்சர்கள் வெளியே சுதந்திரமாக உள்ளனர். என்ன இது நியா யம்? மத்திய பா.ஜனதா அரசில் காப்பீடு ஊழல், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.

இவ்வாறு அவர் பேசி னார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com