உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதை

சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார்.வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.
உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதை
Published on

மத்தூர்:

மத்தூர் அருகே மாதம்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (வயது 65). மத்தூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சின்னத்தம்பி படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கோட்ட வருவாய் ஆய்வாளர் ஷாஜகான், போச்சம்பள்ளி தாசில்தார் சத்தியா, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சின்னத்தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்கள்.

மத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கவுதம், ஒட்டப்பட்டி ஊராட்சி தலைவர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com