

கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் `தரமணி' படம், கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ரசிகர்களின் தொடர் ஆதரவால், 'தரமணி' படத்தின் காட்சி எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பு மட்டுமின்றி வணிகரீதியாகவும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நடுவே, தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படக்குழுவையும் போனில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் கூறுகையில்,
இதுபோன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன். 'தரமணி' ஒரு துணிச்சலான படம் (Bold film) என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார்.