ஜன நாயகன் படத்தில் 12 மாற்றங்கள்... தணிக்கை விவரங்கள் வெளியீடு

விஜயின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏ சான்று வழங்கியுள்ளது.
‘ஜன நாயகன்’ கசிவு விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
Published on

ஏழு மாத கால போராட்டத்திற்கு பிறகு, விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியத்திடம் (CBFC) இருந்து இறுதியாக 'ஏ' சான்றிதழை பெற்றுள்ளது.

இருப்பினும், விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) தொடர்பான குறிப்புகள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெறும் காட்சிகள், இந்திய தேசிய கொடி மற்றும் பல வசனங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட திருத்தங்களுடன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

12 மாற்றங்கள்:

CBFC-யின் இணையதளத்தில் தற்போது கிடைக்கப்பெறும் நீக்கங்கள் மற்றும் மாற்றங்களின் படி, இந்தப் படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் 12 மாற்றங்களை செய்துள்ளனர். இந்தப் படம் தற்போது ஜூலை 24 அன்று உலகெங்கும் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த முன்னேற்றத்தை SCREEN-க்கு உறுதிப்படுத்திய KVN புரொடக்ஷன்ஸின் வர்த்தகத் தலைவரும் தயாரிப்பாளருமான சுப்ரித் மோகன், படத்திற்கு இப்போது சான்றிதழ் கிடைத்துவிட்டதாகக் கூறினார். “நாங்கள் ஜூலை 24 அன்று படத்தை உலகளவில் வெளியிடுவோம்,” என்றும் அவர் கூறினார்.

திருத்தங்கள்:

TVK குறிப்புகள் திருத்தப்பட்டன, அம்பேத்கர் காட்சி மாற்றப்பட்டது.

திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் வரும் “அம்பேத்கர் சட்டம்” என்ற வசனத்திற்குப் பதிலாக “டிவிகே சட்டம்” என்று மாற்றப்பட்டுள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும்.

மேலும், ஆடியோ மற்றும் வீடியோவில் “டிவிகே” என்ற வார்த்தை இடம்பெறும் இடங்களை எல்லாம் நீக்க தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், ஒரு புத்தகத்தின் அட்டையில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இடம்பெறும் காட்சிகள் திரைப்படத்தில் எங்கெல்லாம் தோன்றுகின்றனவோ, அங்கெல்லாம் அவற்றை மாற்றியமைக்க CBFC உத்தரவிட்டது.

இந்திய தேசியக் கொடி தரையில் விழுவதைக் காட்டும் ஒரு காட்சியை நீக்குமாறும் தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.

ஆடியோ திருத்தங்கள்:

"பாகவதம்" மற்றும் "ரங்கநாதர்"

"தெவிடிய பையா" மற்றும் "ஒத்தா"

"இந்தியா என் கல்ல விழா வைக்கறேன்"

"சிலுவைல"

" ஆபரேஷன் மெலுஹா" என்பதை விளக்கும் காட்சியின் போது "ஓம்" என்ற வார்த்தை உட்பட பல வார்த்தைகளும் குறிப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், திரைப்படத்தின் ஒரு கட்டத்தில், “பொன்னோட…” என்று தொடங்கும் ஒரு முழு வசனத்தையும் சிபிஎஃப்சி முடக்கியது.

காட்சி மாற்றங்கள்:

குழந்தை எரிப்பு காட்சிகள் மாற்றப்பட்டன

ஒரு குழந்தை எரிவதைக் காட்டும் காட்சிகளை நீக்கி மாற்றுமாறு சிபிஎஃப்சி தயாரிப்பாளர்களை கேட்டுக்கொண்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அடையாள அட்டை/சிகரெட் அவமரியாதையாகக் கீழே உருட்டப்படுவதைக் காட்டும் மற்றொரு காட்சியும் மாற்றப்பட்டது.

மேலும், திரைப்படத்தில் 'ஷீலா ராணி' என்ற பெயர் பேசப்படும் இடங்களில் எல்லாம் அது மாற்றப்பட்டுள்ளது.

சான்றிதழ் விவரங்களின் படி திரைப்படத்தில் கிட்டத்தட்ட 20 நொடிகள் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 10 நொடிகள் வரையிலான காட்சிகள் அல்லது வசனங்கள் மாற்றவோ அல்லது திருத்தவும் செய்யப்பட்டுள்ளன.

தணிக்கை வாரிய மாற்றங்களுக்கு பிறகு திரைப்படம் 3 மணி 3 நிமிடங்கள் 11 நொடிகள் வரை ரன்டைம் கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com