search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    பாப்ரி பியோல்
    X
    பாப்ரி பியோல்

    ஜம்மு காஷ்மீர் ஸ்பெஷல் பாப்ரி பியோல்

    புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    ஜம்மு மற்றும் காஷ்மீரில் புகழ்பெற்ற இந்த பானம் வட இந்திய பகுதிகளிலும் பிரபலமானது. துளசி விதைகள் அல்லது சப்ஜா விதைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானம் பண்டைய காலம் முதலே புழக்கத்தில் இருந்து வருகிறது. முகலாய பேரரசர் பாபர் தான் இந்த பானத்தை இப்பகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கு பெயர் பெற்ற இந்த பாப்ரி பியோல் பானமானது பால், தண்ணீர், துளசி விதைகள், தேங்காய் போன்ற பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வட்டார மொழியில்,‘கான் சர்பத்’ என்றும் அழைக்கப்படுகிறது, கான் என்பது விலைமதிப்பற்ற நகைகள் என்று பொருள்படும். அதற்கேற்ப விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது ஒளி ஊடுருவக்கூடிய முத்துக்கள் போல் மிளிரும்.
     
    தேவையான பொருட்கள்:


    காய்ச்சிய பால் - 500 மி.லி.
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    துளசி விதை அல்லது சப்ஜா விதை - 25 கிராம்
    நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா - 25 கிராம்
    தண்ணீர் - ஒரு கப்
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    துளசி அல்லது சப்ஜா விதைகளை 1 கப் தண்ணீரில் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். பால் ஆறியவுடன் ஊறவைத்த விதைகளை சேர்க்கவும்.

    பின்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, கிளறவும்.

    துருவிய தேங்காய், குங்குமப்பூ மற்றும் பாதாம், பிஸ்தாவை தூவி 5 முதல் 6 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின்பு பருகலாம்.

    இதனை குளிர்ச்சியாக சாப்பிடுவது சிறந்தது.
    Next Story
    ×