search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    குலதெய்வத்தை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய பரிகாரம்...
    X

    குலதெய்வத்தை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய பரிகாரம்...

    • குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்.
    • நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம்.

    நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன வழிபாட்டு முறையை செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும்.

    மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தலைவாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு, பலகாரம், காதோல கருகமணி, காரவகை, பொரிகடலை மற்றும் சர்க்கரை அல்லது வெண் பொங்கல் வைத்து படையல் போடவேண்டும்.

    செம்பு நிறைய தண்ணீர்வைத்து மாவிலை வைத்து மேலே தேங்காய் வைக்கவேண்டும். தேங்காய் வைத்த செம்பை சுற்றி பிள்ளையார் துண்டினை சுற்றிவிடவும்.

    மஞ்சள் தூள் மூலம் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்குமம் பொட்டிடவேண்டும். இதன் மீது ஜவ்வாது, புனுகு சந்தனம், பச்சைக்கற்பூரம் தெளிக்க வேண்டும். இவைகளை செய்து முடித்தபிறகு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டாக வெட்டி குங்குமம் தடவி நான்கு பக்கம் வைக்கவேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.

    ஓம்ஸ்ரீம் அம்உம் வம்லம்சிங்

    ஐயும் கிலியும் சவ்வும்ஜம்ஜம்

    பம் யம் ரம் மஹா குலதெய்வமே

    எங்கு நீ இருந்தாலும் உன் ரூபத்தை என் கண்முன் காட்டு. எதிரிகள் உன்னை கட்டிஇருந்தாலும் கட்டை உடைத்து குலம் காக்க ஓடிவா முப்பாட்டன், பாட்டன், தந்தைவழி குலதெய்வமே குலம் காக்க ஓடிவா

    சர்வதனமே சர்வஜனமே வா வா

    குலதெய்வமே வசிவசி ஹீம்பட் சுவாகா

    இதை 48 முறை சொல்லி பிறகு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.

    இதை மூன்று பெளர்ணமி நாட்களில் செய்துவர குலதெய்வம் ஏதோ வழியில் கனவில் கூட தெரியவரும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

    Next Story
    ×