search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இன்னும் 13 போட்டிகள் உள்ளன- ஹர்திக் பாண்ட்யா
    X

    இன்னும் 13 போட்டிகள் உள்ளன- ஹர்திக் பாண்ட்யா

    • மும்பை அணிக்கு கடைசி ஐந்து ஓவரில் 43 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
    • கைவசம் ஏழு விக்கெட் இருந்த நிலையில் தோல்வியை சந்தித்தது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் குஜராத் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியுடன் தொடர்ச்சியாக 12-வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.

    போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஐந்து ஓவர்களில் 42 நாட்கள் என்பது கடைசி நேரத்தில் மிகவும் குறைவு எனப் பார்க்கும் நாட்களில் இதுவும் ஒன்று. ஆனால் நாங்கள் எங்களுடைய வேகத்தை சற்று இழந்துவிட்டோம். அதனால் உண்மையிலேயே நாங்களாகவே சேஸிங்சில் இருந்து பின்வாங்கி விட்டோம்.

    ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தார்கள். இந்த மைதானத்தில் ரசிகர்கள் மிகவும் சிறந்த சூழ்நிலையை உணர முடிவும். ரஷித்கான் ஓவரில் திலக் வர்மா ஒரு ரன் எடுக்க மறுத்தது, அந்த நேரத்தில் அவருக்கு அது சிறந்த யோசனையாக இருந்திருக்கும். அந்த விசயத்தில் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். இது பெரிய விசயம் இல்லை. எங்களுக்கு இன்னும் 13 போட்டிகள் உள்ளன.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    வெற்றி குறித்து சுப்மன் கில் கூறுகையில் "எங்கள் அணி வீரர்கள் பதட்டத்தை கட்டுப்பிடித்திய விதம், பனிப்பொழிவு இருந்த போதிலும் கடைசி நான்கு ஓவர்களில் பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பானது. பனிப்பொழிவு இருந்தபோதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய விதம், நாங்கள் தொடர்ந்து போட்டியில் வெற்றிக்காக இருக்கிறோம் என்பதை உறுதி செய்தார்கள். இது எல்லாம் நெருக்கடி கொடுப்பதாக அமைந்தது.

    நெருக்கடியில் விளையாடி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை மும்பை வீரர்ளுக்கு ஏற்படுத்த விரும்பினோம். அவர்களை நெருக்கடிக்குள் கொண்டு வந்து தவறு செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது திட்டமாக இருந்தது" என்றார்.

    Next Story
    ×